பல்லடத்தில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து அரிவாள் முனையில் பணம் கொள்ளை - தொடர் கொள்ளை சம்பவங்களால் மக்கள் பீதி!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நள்ளிரவில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் பெரும்பாலி பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி. ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான ஜெயமணி, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு ஜெயமணி தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சத்தம் கேட்டதால் கதவை திறந்து பார்த்துள்ளார்.



அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று பேர் கையில் அரிவாளுடன் ஜெயமணியை மிரட்டி பீரோ சாவியை வாங்கி, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது பேரனின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் ஜெயமணி புகார் அளித்துள்ளார்.



இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் அரிவாலுடன் வீட்டுக்குள் புகுந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பல்லடம் பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...