கோவை யானைக்குட்டியின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு - ஆய்வுக்கு அனுப்பிய வனத்துறை!

கோவை பெரியநாய்க்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்த யானை குட்டியின் எழும்பு, தோல் உள்ளிட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை வனத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் மாங்குலி, தடாகம் காப்பு காட்டு பகுதியில் நேற்று வனத்துறை களப்பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பகுதியில் திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது இறந்த யானை குட்டியின் உடல் பாகங்கள், எலும்புகள் சிதறிக் கிடந்தன.

தகவலறிந்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டதோடு, ஆங்காங்கே சிதறி கிடந்த எலும்பு துண்டுகள், உடல் பாகங்கள் ஆகியவற்றை சேகரித்தனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட மருத்துவ அலுவலர் சுதாகர் தலைமையில் கோவை கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், ரேஞ்சர் செல்வராஜ் மற்றும் தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்பினர் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், கண்டறியப்பட்ட எலும்புகள் வைத்து யானை குட்டி வயது சுமார் மூன்று வார காலமாக இருக்கலாம் என்றும், அக்குட்டி இறந்து பிறந்து இருக்கலாம் அவ்வாறு இறந்த யானை குட்டியை வனப்பகுதியில் உள்ள செந்நாய் உள்ளிட்ட விலங்குகள் உண்டதால் பாகங்கள் சிதறி கிடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டது.

பின்னர், சேகரிக்கப்பட்ட யானைக் குட்டியின் ஒரு சில எலும்புகள் மட்டும் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மற்ற பாகங்கள் அதே பகுதியில் வனத்துறையினரால் புதைக்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...