உடுமலை திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைவு!

உடுமலை அருகே உள்ள திரு மூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இந்த அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.


திருப்பூர்: பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 45.38 அடியாக குறைந்துள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

உடுமலை நகரம் உட்பட பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நான்கு மண்டலங்களாகப் பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது. அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாகத் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.



பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 45.38 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 825 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. 1,128 கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...