கோவை வேளாண்‌ பல்கலை.யில் 2 நாள் புத்தகக்‌ கண்காட்சி - ஏராளமான புத்தகங்கள் விற்பனை!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2 நாள் புத்தக கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேவையான புத்தங்களை வாங்கி சென்றனர்.


கோவை: கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் புத்தக கண்காட்சி நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக‌ மாணவர்‌ நல மையத்தின்‌ சார்பில் 2 நாள்‌ புத்தகக்‌ கண்காட்சி நேற்று (08.02.2023) துவங்கியது.



இந்த புத்தக கண்காட்சியை பல்கலைகழக துணை வேந்தர்‌ முனைவர்‌ கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.



ஆண்டு தோறும்‌ பல்கலைக்கழக நூலகத்தால்‌ நடத்தப்படும்‌ இந்த புத்தக‌ கண்காட்சியில்‌ நாடு முழுவதிலிருந்து வேளாண்‌ புத்தக பதிப்பாளர்களும்‌ விற்பனையாளர்களும்‌ கலந்து கொண்டு தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்துவர்‌.

இந்தாண்டும் வேளாண்மை சம்பந்தப்பட்ட அறிவியல்‌ பாடப்‌ பிரிவுகள்‌, பொது அறிவு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள்‌ மற்றும்‌ பல்வேறு புதுமை படைப்புகள்‌ கண்காட்சியில்‌ இடம்‌ பெற்றிருந்தன.

இதில்‌ பல்கலைக்கழக உயர்‌ அதிகாரிகளும்‌, பேராசிரியர்களும்‌, மாணவர்களும்‌ ஆர்வத்துடன்‌ கலந்து கொண்டு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து சென்றனர்‌.

மேலும்‌ பல்கலைக்கழக நூலகத்திற்குத்‌ தேவையான புத்தகங்களை மாணவ மாணவியர்கள்‌ மற்றும்‌ பேராசிரியர்களின்‌ பரிந்துரையின்படி பெறப்பட்டது.

இக்கண்காட்சியில்‌ பெரும்‌ திரளாக மாணவர்களும்‌, பல்கலைக்கழக ஆசிரியப்‌ பெருமக்களும்‌ கலந்து கொண்டு சிறப்பித்தனர்‌. இப்புத்தக கண்காட்சியில்‌ அனைத்து புத்தகங்களுக்கும்‌ 20 சதவீதம்‌ தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

இப்புத்தத கண்காட்சி பல்கலைக்கழத்தின்‌ அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கு பயனுள்ளதாக அமையும்‌. குறிப்பாக இந்தாண்டு விளையாட்டு தொடர்பான நூல்களுக்கான தனி விற்பனையகம்‌ அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...