கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - கோவை ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிடவும் வருடம் தோறும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இன்று இத்தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இத்தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.



முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.



பின்னர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா, தொழிலாளர் உதவி ஆணையர் காயத்ரி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...