கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - கோவை ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிடவும் வருடம் தோறும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இன்று இத்தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இத்தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.



முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.



பின்னர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா, தொழிலாளர் உதவி ஆணையர் காயத்ரி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...