கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்க தலைவராக 'அன்னலெட்சுமி' ராமசாமி தேர்வு!

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக அன்னலெட்சுமி ஓட்டலின் நிர்வாக இயக்குநர் ராமசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.



கோவை: கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்ட ஓட்டலியர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சியும் கடந்த செவ்வாய்க்கிழமை (07.02.2023) நடைபெற்றது.



கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜோன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஹோட்டல் அன்னலெட்சுமியின் நிர்வாக இயக்குனர் K.A.ராமசாமி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



அதேபோல், ஹரி பவனம் ஹோட்டல்களின் நிர்வாக இயக்குனர் பாலச்சந்தர் ராஜு செயலராகவும் சங்க உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கோவிந்தராஜன் பொருளாளராக தொடர்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது.

சங்கத்தின் துணை தலைவர்களாக வஞ்சிமுத்து (பூமராங் ஐஸ் கிரீம்), மணிகண்டன் (ஸ்ரீ ஆனந்தாஸ்), காமராஜ் (பொள்ளாச்சி) மற்றும் கிருஷ்ணன் (மேட்டுப்பாளையம்) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

மேலும், இணை செயலர்களாக ஜெகன் தாமோதரசாமி (ஸ்ரீ அன்னபூர்ணா), டேவிட் (கொக்கரக்கோ), ராஜன் (வளர்மதி ஹோட்டல்ஸ்), வெங்கடேஷ் (ஸ்ரீ ஆனந்தாஸ்) மற்றும் சுந்தரராகவன் (பொள்ளாச்சி) ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் 2023ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை பதவிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் பற்றி புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் K.A.ராமசாமி மற்றும் செயலர் பாலச்சந்தர் ராஜு கூறியதாவது,

வரும் இரண்டு ஆண்டுகளில் சங்கத்தின் உறுப்பினர்களை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட உள்ளது.

அத்துடன் ஆண்டு முழுவதும் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் அடங்கிய நாட்காட்டியை ஏற்படுத்தவும், ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

சங்கம் சார்பில் மாரத்தான் போட்டிகள், ரத்த தான முகாம்கள், கிரிக்கெட் டீம் உருவாக்கி போட்டிகள் மற்றும் வரவிருக்கும் ஆண்டில் உணவு திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சங்கத்திற்கான மேம்படுத்தப்பட்ட புது இணையதள பக்கத்தை உருவாக்கவும், அதன் மூலம் உறுப்பினர்கள் தகவல்கள், சேர்க்கை மற்றும் சந்தா கட்டுதல் போன்ற பணிகளை எளிதாக்கப்பட உள்ளது.

அதேபோல் 2 ஆண்டுகளில் சங்கத்திற்கான புது அலுவலகத்தை கட்டவும் திட்டமிட்டுள்ளோம்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...