பல்லடத்தில் பட்டப்பகலில் வீட்டின் ஓட்டைப்பிரித்து திருட முயற்சி - கையும் களவுமாக சிக்கிய திருடனால் பரபரப்பு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பட்டப் பகலில் நான்கு வீடுகளில் ஓட்டை பிரித்து அரிவாளுடன் திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய கூட்டாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் சரோஜினி. இவரது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரோஜினி கோவையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார்.



இதனை நோட்டமிட்ட திருடர்கள், இன்று பிற்பகல் 11 மணி அளவில் அவரது வீட்டின் ஓட்டை பிரித்து கையில் அரிவாளுடன் உள்ளே இறங்கியுள்ளனர்.



ஏதேச்சையாக சரோஜினியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், அவரது வீட்டிற்கு சென்றபோது சத்தம் கேட்டு வீட்டின் கதவை திறந்தபோது கையில் அரிவாளுடன் நின்ற திருடனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



உடனடியாக ஊர் மக்கள் திருடனை கையும் களவுமாக பிடித்துவைத்து, காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருடனை கைது செய்து விசாரணைக்காக பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், வீட்டில் திருட முயன்றவன் மேட்டூரை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும், மாதப்பூர் அருகே நல்லா கவுண்டம்பாளையத்தில் பெயிண்டர் வேலை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தன்னுடன் தன் நண்பர்களும் திருட வந்ததாகவும், மேலும் மூன்று வீடுகளில் ரூபாய் 5000 திருடி உள்ளதாகவும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து பிடிபட்ட ஈஸ்வரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய ஈஸ்வரனின் கூட்டாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரிவாளுடன் வீட்டின் உள்ளே இறங்கி திருடர்கள் திருட முயன்ற சம்பவம் மாதப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...