உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை தூசி படிந்து காணப்படுவதால் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்குதினமும் உடுமலைமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு வருகை புரிகின்றனர்.

இந்த நிலையில் பழமையான வட்டாட்சியர் அலுவலகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கடந்த சில மாதங்களாகவே புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையக் கட்டடம் உட்பட பல்வேறு பகுதிகளில் மேற்கூரை போதிய பராமரிப்பு இல்லாமல் தூசி படிந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.



பார்ப்பதற்கு மிகவும் பழமையான கட்டிடம் போல காட்சியளிக்கும் நிலையில், ஆதார் சேவை மையத்துக்கு வரும் பொதுமக்கள் மீதுமேற்கூரையில் இருந்துதூசுகள் அதிக அளவு விழுந்து வருகின்றன.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு முறையாவது வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...