உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை தூசி படிந்து காணப்படுவதால் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்குதினமும் உடுமலைமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு வருகை புரிகின்றனர்.

இந்த நிலையில் பழமையான வட்டாட்சியர் அலுவலகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கடந்த சில மாதங்களாகவே புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையக் கட்டடம் உட்பட பல்வேறு பகுதிகளில் மேற்கூரை போதிய பராமரிப்பு இல்லாமல் தூசி படிந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.



பார்ப்பதற்கு மிகவும் பழமையான கட்டிடம் போல காட்சியளிக்கும் நிலையில், ஆதார் சேவை மையத்துக்கு வரும் பொதுமக்கள் மீதுமேற்கூரையில் இருந்துதூசுகள் அதிக அளவு விழுந்து வருகின்றன.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு முறையாவது வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...