உடுமலை அருகே தைப்பூச நிறைவு நாள் விழா - நள்ளிரவு வரை வள்ளி கும்மியாட்டம் ஆடி சிறப்பு வழிபாடு!

தைப்பூச திருவிழா நிறைவு நாளையொட்டி, உடுமலை அருகேயுள்ள சடையகவுண்டன் புதூர் பால விநாயகர் கோவிலில் ஆண்கள், பெண்கள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நள்ளிரவு வரை வள்ளி கும்மியாட்டம் ஆடி உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: உடுமலை அருகே தைப்பூச திருவிழா நிறைவு நாளை ஆண்கள், பெண்கள் என பலரும் பங்கேற்று வள்ளி கும்மியாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடினர்.

தைப்பொங்கலுக்கு பிறகு கிராமங்களில் தைப்பூசம் என்பது சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். முருகப் பெருமானை வழிபடும் தைப்பூசத்தின் நிறைவு நாள் விழா நேற்று நடைபெற்றது.



இதனை முன்னிட்டு உடுமலை அருகே அந்தியூர் ஊராட்சி சடையகவுண்டன் புதூர் ஜீவா நகரில் பால விநாயகர் கோவிலில் உள்ள முருகனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதனிடையே கோவில் முன் தேர்கோலமிட்ட பக்தர்கள், முருகன் சிலையை சிறப்பாக அலங்கரித்து மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



முருகப்பெருமானின் கதைகளை 40 பாடல்களாக பாடி வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. குறிப்பாக இதில் வள்ளியின் பிறப்பு திருமணம் குறித்த பாடல்கள் முக்கிய பங்கு வகித்தது. பாடுபவர்கள் மையமாக நிற்க சுற்றிலும் பெண்கள், ஆண்கள் ஆடும் கும்மியாட்டம் வள்ளி கும்மியாட்டம் எனப்படுகிறது.

குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரையும் இணைந்து பாரம்பரிய வாத்தியத்துடன் நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த கும்மியாட்டத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெற்றது.

Newsletter

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...