கிணத்துக்கடவு அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை!

கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் விளை நிலங்களுக்குள் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக புகுந்து, வாழை மரங்களை கடித்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி, மரவள்ளி, வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோதவாடி கிழக்குப் பகுதியில் உள்ள சிவசாமி என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளார்.



சாகுபடி செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் ஆன நிலையில் வாழை வளர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரங்களில் வாழை தோப்புக்குள் காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.



இரவு நேரங்களில் வரும் காட்டு பன்றிகள் வாழை தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரத்தின் அடிப்பகுதியை கடித்து சேதப்படுத்தி வருவதால், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விளை நிலங்களுக்குள் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...