கிணத்துக்கடவு அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை!

கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் விளை நிலங்களுக்குள் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக புகுந்து, வாழை மரங்களை கடித்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி, மரவள்ளி, வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோதவாடி கிழக்குப் பகுதியில் உள்ள சிவசாமி என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளார்.



சாகுபடி செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் ஆன நிலையில் வாழை வளர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரங்களில் வாழை தோப்புக்குள் காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.



இரவு நேரங்களில் வரும் காட்டு பன்றிகள் வாழை தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரத்தின் அடிப்பகுதியை கடித்து சேதப்படுத்தி வருவதால், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விளை நிலங்களுக்குள் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...