கிணத்துக்கடவு அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் - விவசாயிகள் வேதனை!

கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடி பகுதியில் விளை நிலங்களுக்குள் காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக புகுந்து, வாழை மரங்களை கடித்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காட்டுப் பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி கிராமப் பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி, மரவள்ளி, வாழை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோதவாடி கிழக்குப் பகுதியில் உள்ள சிவசாமி என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளார்.



சாகுபடி செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் ஆன நிலையில் வாழை வளர்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரங்களில் வாழை தோப்புக்குள் காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.



இரவு நேரங்களில் வரும் காட்டு பன்றிகள் வாழை தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரத்தின் அடிப்பகுதியை கடித்து சேதப்படுத்தி வருவதால், வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விளை நிலங்களுக்குள் காட்டு பன்றிகள் வராமல் தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...