பல்லடம் அருகே பள்ளி மாணவிகளை நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர் - அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!

பல்லடம் அருகே பேருந்தில் இருந்து 15 பள்ளி மாணவிகளை நடத்துநர் நடுவழியில் இறக்கி விட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பல்லடம்-உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையத்தில் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பேருந்தில் பயணித்த பள்ளி மாணவிகளை நடுவழியில் நடத்துநர் இறக்கிவிட்டதை கண்டித்து பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் அடுத்த சித்தம்பலம் ஊராட்சிக்குட்பட்ட புள்ளியப்பம்பாளையம் பகுதியில் இருந்து ஏராளமான மாணவ - மாணவிகள் பல்லடம் அருகேயுள்ள பள்ளிகளுக்கு தினந்தோறும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை வாவிபாளையத்தில் இருந்து சித்தம்பலம் மற்றும் பல்லடம் வழியாக கணபதிபாளையம் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயணித்துள்ளனர்.

இவ்வழியாக பள்ளிக்கு செல்ல காலை மாலை நேரங்களில் பேருந்து வசதி கூடுதலாக இல்லாததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பேருந்தில் பயணித்த 15 பள்ளி மாணவிகளை பேருந்து நடத்துநர் கேத்தனூரிலேயே இறக்கிவிட்டு சென்றுள்ளார்.



இந்நிலையில், 15 பள்ளி மாணவிகளும் கேத்தனூரில் இருந்து புள்ளியப்பம் பாளையத்திற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளனர். இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் பள்ளி மாணவிகள் முறையிட்டுள்ளனர்.



இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பல்லடம்-உடுமலை சாலை புள்ளியப்பம்பாளையத்தில் இன்று காலை அரசு நகரப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி மாணவிகளை எப்படி பாதியிலேயே இறக்கிவிட்டு செல்லலாம் என பொதுமக்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில், அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏதுவாக பயணிக்க கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...