உடுமலை பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள் மோதல் - பயணிகள் அவதி

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்குவது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு.


திருப்பூர்: உடுமலை பேருந்து நிலையத்தில், ஓட்டுநர்கள் மோதிக் கொண்டதால், பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வரமுடியாமல் இடையூறு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், பெதப்பம்பட்டி, பொள்ளாச்சி, திருமூர்த்தி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பேருந்து புறப்படும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேரம் தவறி புறப்படுவதால் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.

பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், பெதப்பம்பட்டி செல்ல நின்ற அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் டைமிங் பிரச்சினை காரணமாக மோதிக்கொண்டனர். இதனால் பேருந்தை எடுக்க தாமதமானதால் பயணிகள் அவதிப்பட்டனர்.



இதன்காரணமாக, மற்ற பேருந்துகளும் நிலையத்துக்குள் வருவதில் இடையூறு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடையே சரமசம் ஏற்பட்டதால் அங்கிருந்து சென்று விட்டனர். எனவே, பேருந்து நிலையத்தில் போலீசாரை நியமித்து கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...