உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்குவது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் பரபரப்பு.
திருப்பூர்: உடுமலை பேருந்து நிலையத்தில், ஓட்டுநர்கள் மோதிக் கொண்டதால், பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வரமுடியாமல் இடையூறு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், பெதப்பம்பட்டி, பொள்ளாச்சி, திருமூர்த்தி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பேருந்து புறப்படும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேரம் தவறி புறப்படுவதால் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், பெதப்பம்பட்டி செல்ல நின்ற அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் டைமிங் பிரச்சினை காரணமாக மோதிக்கொண்டனர். இதனால் பேருந்தை எடுக்க தாமதமானதால் பயணிகள் அவதிப்பட்டனர்.

இதன்காரணமாக, மற்ற பேருந்துகளும் நிலையத்துக்குள் வருவதில் இடையூறு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடையே சரமசம் ஏற்பட்டதால் அங்கிருந்து சென்று விட்டனர். எனவே, பேருந்து நிலையத்தில் போலீசாரை நியமித்து கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், பெதப்பம்பட்டி, பொள்ளாச்சி, திருமூர்த்தி மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பேருந்து புறப்படும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேரம் தவறி புறப்படுவதால் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், பெதப்பம்பட்டி செல்ல நின்ற அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் டைமிங் பிரச்சினை காரணமாக மோதிக்கொண்டனர். இதனால் பேருந்தை எடுக்க தாமதமானதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
இதன்காரணமாக, மற்ற பேருந்துகளும் நிலையத்துக்குள் வருவதில் இடையூறு ஏற்பட்டது. பின்னர் அவர்களிடையே சரமசம் ஏற்பட்டதால் அங்கிருந்து சென்று விட்டனர். எனவே, பேருந்து நிலையத்தில் போலீசாரை நியமித்து கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.