உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை

உடுமலை சுற்றுவட்டாரத்தில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பல வருடங்களாகத் தேங்காய் ஒன்றுக்கு 87 பைசா கூலி பெற்று வந்த நிலையில், தற்பொழுது வட மாநிலத்தவர்களுக்குத் தேங்காய் வியாபாரிகள் ஆதரவு கொடுத்து வருவதால், கூலி மேலும் குறைந்துள்ளதாகத் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு.


திருப்பூர்: உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றனர்.



அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தி ஐந்து பேர் மட்டும் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பின்பு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந் கண்ணனை சந்தித்த தொழிலாளர்கள், பல வருடங்களாகத் தேங்காய் ஒன்றுக்கு 87 பைசா கூலி பெற்று வந்த நாங்கள், தற்பொழுது வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பால், காய் ஒன்றுக்கு 77 பைசா பெற்றுக் கொண்டு வேலை செய்வதாகவும், அவர்களுக்குத் தேங்காய் வியாபாரிகள் ஆதரவு தருவதோடு, செலவு செய்து வேலை வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் எங்களுக்கு முறையான கூலி கொடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து நிரந்தரமாக வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தங்களது குடும்பத்தோடு குழந்தைகளோடும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்தனர்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...