உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை

உடுமலை சுற்றுவட்டாரத்தில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பல வருடங்களாகத் தேங்காய் ஒன்றுக்கு 87 பைசா கூலி பெற்று வந்த நிலையில், தற்பொழுது வட மாநிலத்தவர்களுக்குத் தேங்காய் வியாபாரிகள் ஆதரவு கொடுத்து வருவதால், கூலி மேலும் குறைந்துள்ளதாகத் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு.


திருப்பூர்: உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றனர்.



அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தி ஐந்து பேர் மட்டும் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பின்பு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந் கண்ணனை சந்தித்த தொழிலாளர்கள், பல வருடங்களாகத் தேங்காய் ஒன்றுக்கு 87 பைசா கூலி பெற்று வந்த நாங்கள், தற்பொழுது வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பால், காய் ஒன்றுக்கு 77 பைசா பெற்றுக் கொண்டு வேலை செய்வதாகவும், அவர்களுக்குத் தேங்காய் வியாபாரிகள் ஆதரவு தருவதோடு, செலவு செய்து வேலை வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் எங்களுக்கு முறையான கூலி கொடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து நிரந்தரமாக வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தங்களது குடும்பத்தோடு குழந்தைகளோடும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...