உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை

உடுமலை சுற்றுவட்டாரத்தில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பல வருடங்களாகத் தேங்காய் ஒன்றுக்கு 87 பைசா கூலி பெற்று வந்த நிலையில், தற்பொழுது வட மாநிலத்தவர்களுக்குத் தேங்காய் வியாபாரிகள் ஆதரவு கொடுத்து வருவதால், கூலி மேலும் குறைந்துள்ளதாகத் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு.


திருப்பூர்: உடுமலையில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மேற்பட்டோர் முற்றுகையிட முயன்றனர்.



அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த காவல்துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தி ஐந்து பேர் மட்டும் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.

பின்பு வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந் கண்ணனை சந்தித்த தொழிலாளர்கள், பல வருடங்களாகத் தேங்காய் ஒன்றுக்கு 87 பைசா கூலி பெற்று வந்த நாங்கள், தற்பொழுது வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பால், காய் ஒன்றுக்கு 77 பைசா பெற்றுக் கொண்டு வேலை செய்வதாகவும், அவர்களுக்குத் தேங்காய் வியாபாரிகள் ஆதரவு தருவதோடு, செலவு செய்து வேலை வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் எங்களுக்கு முறையான கூலி கொடுக்க வேண்டும் என்றும், தொடர்ந்து நிரந்தரமாக வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும், இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தங்களது குடும்பத்தோடு குழந்தைகளோடும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அல்லது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்தனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...