உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி விக்டோரியா கௌரி நியமனத்தைப் பரிசீலிக்க வேண்டும்..! - தமுமுக பொருளாளர் கோவை உமர் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமனம் செய்ததை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொருளாளர் கோவை உமர் கோரிக்கை.



திருப்பூர்: சென்னை கூடுதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரியை நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநிலப் பொருளாளர் கோவை உமர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 15ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் 191வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில பொருளாளர் கோவை உமர், மாநில அமைப்புச் செயலாளர் பழநி பாருக்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் முஜிப் ரகுமான், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பல்லடத்தில் இருந்து சுமார் 5கி.மீ சுற்றளவில் அனைத்து சமூக மக்களும் இந்த ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாகப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலப் பொருளாளர் கோவை உமர், பாஜகவின் வழக்கறிஞர் அணியிலிருந்து கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எதிராக மிக மோசமான கருத்துக்களைத் தெரிவித்து வந்த வழக்கறிஞர் விக்டோரியா கௌரியை சென்னை கூடுதல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அவரை நீதிபதியாக நியமனம் செய்ததை உச்ச நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரச்சனைக்கு மாநில தலைமை நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். 25 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு சிறையில் அவதிப்படும் இஸ்லாமியச் சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...