கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நைட்ரவேட் - 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள், 3 செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், அவ்வப்போது தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பஜார் காவல்நிலைய இன்பெக்டர் லதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் உள்ளடக்கிய தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் போதைக்காக மாத்திரைகளை விற்பது தெரியவந்தது. போலீசார் கண்காணித்ததில், சந்தேகத்திற்குரிய நான்கு பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நான்கு பேரும் போதைக்காக மாத்திரையை விற்பனை செய்து வந்தது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, பிடிபட்ட முகமது தாரிக், நவாஸ், அல்மனார், கார்த்திகேயன் உள்ளிட்ட நான்கு போதை மாத்திரை வியாபாரிகளை பஜார் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து நைட்ரவேட் - 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள், 3 செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில், கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பஜார் காவல்நிலைய இன்பெக்டர் லதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் உள்ளடக்கிய தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் போதைக்காக மாத்திரைகளை விற்பது தெரியவந்தது. போலீசார் கண்காணித்ததில், சந்தேகத்திற்குரிய நான்கு பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நான்கு பேரும் போதைக்காக மாத்திரையை விற்பனை செய்து வந்தது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, பிடிபட்ட முகமது தாரிக், நவாஸ், அல்மனார், கார்த்திகேயன் உள்ளிட்ட நான்கு போதை மாத்திரை வியாபாரிகளை பஜார் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து நைட்ரவேட் - 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள், 3 செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.