கோவையில் போதை மாத்திரை விற்பனை கும்பல் கைது - செல்போன், போதை மாத்திரைகள் பறிமுதல்!

கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நைட்ரவேட் - 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள், 3 செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், அவ்வப்போது தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பஜார் காவல்நிலைய இன்பெக்டர் லதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் உள்ளடக்கிய தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் போதைக்காக மாத்திரைகளை விற்பது தெரியவந்தது. போலீசார் கண்காணித்ததில், சந்தேகத்திற்குரிய நான்கு பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நான்கு பேரும் போதைக்காக மாத்திரையை விற்பனை செய்து வந்தது உறுதிசெய்யப்பட்டது.



இதையடுத்து, பிடிபட்ட முகமது தாரிக், நவாஸ், அல்மனார், கார்த்திகேயன் உள்ளிட்ட நான்கு போதை மாத்திரை வியாபாரிகளை பஜார் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து நைட்ரவேட் - 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள், 3 செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...