கோவையில் பைக்கை திருடியபோது உரிமையாளரிடம் சிக்கிய கொள்ளையர்கள் - போலீசாரிடம் ஒப்படைப்பு!

கோவை சுங்கம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இரண்டு பேரை, உரிமையாளரே அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கையும் களவுமாக பிடித்து பந்தைய சாலை போலீசாரிடம் ஓப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சுங்கம் அருகே இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இருவரை உரிமையாளரே மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சுங்கம் பகுதியில் வசிப்பவர் முகமது அலி. இவர் தனது வீட்டின் தரைத்தளத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில், நேற்றிரவு தனது இருசக்கர வாகனத்தை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே நிறுத்தி வைத்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

இதனிடையே, நள்ளிரவில், வாகனத்தை உடைப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனையறிந்து வெளியே வந்த போது 2 நபர்கள் ஸ்க்ரூ டிரைவர் மூலமாக வாகனத்தின் சங்கிலியை உடைத்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்துள்ளார். தொடர்ந்து, பந்தய சாலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம் இருவரையும் ஒப்படைத்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் கைதான நபர்கள், ஈரோட்டைச் சார்ந்த முத்துசாமி மற்றும் தாராபுரத்தைச் சார்ந்த மாயக்கண்ணன் என்பது தெரியவந்தது. மேலும், முத்துசாமி மீது ஏற்கனவே ஈரோடு காவல் நிலையத்தில் பைக் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாக நான்கு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் பந்தய சாலை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...