பல்லடம் அருகே சாலையில் குழாய் உடைந்து பீறிட்டு வெளியேறிய தண்ணீர் - பரபரப்பு

பல்லடம் அடுத்த அவிநாசி - மங்கலம் சாலையில் 4ஆம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின் குழாய் உடைந்து 15 அடி உயரத்திற்கு மேல் பீறிட்டு தண்ணீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடி வீணாகியது. குழாய் வால்வில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக உடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் திடீரென 15 அடி உயரத்திற்கு மேல் பீறிட்டு தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமுகை அருகே சுமைதாங்கி பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அன்னூர், அவிநாசி, மோப்பிரிப்பாளையம், பல்லடம் வழியாக திருப்பூர் வரை நான்காம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின் குழாய் செல்கிறது.



இந்நிலையில் அவிநாசி - மங்கலம் சாலையில் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பீறிட்டு தண்ணீர் வெளியேறியது. பிரதான குழாய் உடைந்ததால் 25 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறிய நிலையில், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இதனிடையே குழாய் வால்வில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும், தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு உடைந்த குழாயினை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...