பல்லடம் அருகே சாலையில் குழாய் உடைந்து பீறிட்டு வெளியேறிய தண்ணீர் - பரபரப்பு

பல்லடம் அடுத்த அவிநாசி - மங்கலம் சாலையில் 4ஆம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின் குழாய் உடைந்து 15 அடி உயரத்திற்கு மேல் பீறிட்டு தண்ணீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடி வீணாகியது. குழாய் வால்வில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக உடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் திடீரென 15 அடி உயரத்திற்கு மேல் பீறிட்டு தண்ணீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமுகை அருகே சுமைதாங்கி பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அன்னூர், அவிநாசி, மோப்பிரிப்பாளையம், பல்லடம் வழியாக திருப்பூர் வரை நான்காம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மெயின் குழாய் செல்கிறது.



இந்நிலையில் அவிநாசி - மங்கலம் சாலையில் இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பீறிட்டு தண்ணீர் வெளியேறியது. பிரதான குழாய் உடைந்ததால் 25 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறிய நிலையில், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இதனிடையே குழாய் வால்வில் ஏற்பட்ட அதிக அழுத்தத்தின் காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும், தகவல் கிடைத்தவுடன் உடனடியாக தண்ணீர் நிறுத்தப்பட்டு உடைந்த குழாயினை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...