பல்லடத்தில் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் - நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆபத்தை உணராமல் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வதைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய செயல்பட்டுவருகிறது.

இந்தப் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்படும்.



இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.



பேருந்து நடத்துனர் அறிவுறுத்தினாலும், கல்லூரி மாணவர்கள் அதைக் கேட்காமல் பேருந்து படிக்கட்டுகளில் சாகசம் என நினைத்து உயிர் பயமின்றி தொங்கியபடி நாள்தோறும் பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்துகள் நடைபெற்று உயிர் பலி ஏற்படும் முன்பு, மாணவர்களின் இந்த ஆபத்தான பேருந்துப் பயணத்தை தடுத்து நிறுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...