மத்திய ரயில்வே அமைச்சரிடம் பொள்ளாச்சி எம்.பி கோரிக்கை மனு

பொள்ளாச்சி ரயில்‌ நிலையத்தில்‌ மீட்டர்‌ தளத்திலிருந்து அகல ரயில்‌ பாதையாக மாறுவதற்கு முன்‌ இயக்கப்படாமல் இருந்த ஐந்து ரயில்களை, மீண்டும்‌ இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை சந்தித்து பொள்ளாச்சி எம்.பி கோரிக்கை.


திருப்பூர்: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அலுவலகத்தில் நேரில்‌ சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

அவர் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, பொள்ளாச்சி ரயில்‌ நிலையத்தில்‌ மீட்டர்‌ தளத்திலிருந்து அகல ரயில்‌ பாதையாக மாறுவதற்கு முன்‌ இயக்கப்படாமல் இருந்த ஐந்து ரயில்களை, மீண்டும்‌ இயக்க வேண்டும். பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போத்தனூர்‌ சந்திப்பை, கோவை சந்திப்பிற்கு நிகராக துணை ரயில்‌ நிலையமாக அமைக்க வேண்டும்.

பொள்ளாச்சியிலிருந்து விவசாயிகள்‌ பெரும்‌ அளவு பயன்பெற மும்பை வழியாக டெல்லி வரை கிசான் ரயில்‌ இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...