சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள், 2ம்நிலை காவலர் பணிக்கு உடல்தகுதித் தேர்வு - கோவையில் ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

கோவையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாகவுள்ள சிறை காவலர், தீயணைப்பு வீரர்கள், 2 ஆம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.



கோவை: தமிழகம் முழுவதும் 3,552 சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள், 2ம்நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வு கோவையில் இன்று காலை நடைபெற்றது.



இதில் பங்கேற்குமாறு மேற்கு மண்டலத்தை சேர்ந்த 548 பெண்களுக்கும், 623 ஆண்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



கோவை பிஆர்எஸ் மைதானத்தில் ஆண்களுக்கும், நேரு ஸ்டேடியத்தில் பெண்களுக்கும் உடற்தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.



இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.



நேரு ஸ்டேடியத்தில் நடந்த தேர்வுக்கு இன்று 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 185 பெண்கள் இன்று கலந்துகொண்டனர்.



இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உயரம் அளத்தல் போன்றவை இன்று மேற்கொள்ளப்பட்டது.



இதேபோல், பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் இன்று 400 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்த நிலையில், 316 பேர் மட்டுமே பங்கேற்றனர்.



இவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்த்தல் உயரம் மற்றும் உடல் அளவு அளத்தல், 1500 மீட்டர் உடல் தகுதி ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...