நீலகிரியில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் - பலூன் பறக்கவிட்டு தொடக்கி வைத்த ஆட்சியர்!

நீலகிரி எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஆகியோர் பலூன்களை பறக்க விட்டு துவக்கி வைத்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் பலூன்களை பறக்கவிட்டு தொடங்கி வைத்தனர்.



நீலகிரியில் உள்ள எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கியது.



இந்த போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஆகியோர் பலூன்களை பறக்க விட்டு துவக்கி வைத்தனர்.



பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் அம்ரித், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர் என அனைவரும் பங்கேற்கும் வகையில் கால்பந்து போட்டி, தடகள போட்டி, இறகு பந்து போட்டி, கபடி போட்டி, சிலம்பம், நீச்சல் போட்டி, கிரிக்கெட் போட்டி, ஹாக்கி போட்டி, கையுந்து போட்டி என பல்வேறு போட்டிகள் இந்த மாதம் 24 வரை நடைபெறும்.

அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும், என்றார்.



அதனைதொடர்ந்து பள்ளி அளவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களை வாழ்த்தி, அணி தலைவர்களிடம் கால்பந்தினை மாவட்ட ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.



இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, உதகை வட்டாட்சியர் ராஜசேகர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் இந்திரா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...