மத்திய அரசைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சியின் பொதுமக்கள் முதலீடுகளை அதானிக்கு தாரை வார்த்ததாகக் கூறி மத்திய அரசை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்.பி.ஐ பிரதான அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதற்கு கோவை மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று, மோடி அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், அதானிக்கும் அம்பானிக்கும் எல்ஐசி சொத்துக்களை விற்கக் கூடாது, எஸ்பிஐ மற்றும் எல்ஐசியில் முதலீடு செய்தது நடுத்தர வர்க்கத்தினர், அவர்கள் சேமித்த பணம், அதனை விற்கக் கூடாது, கார்ப்பரேட் முதலாளிகளை வளர்க்கக்கூடாது, என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் கருப்புசாமி, எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சியில் பொதுமக்களின் முதலீடுகளை, மோடியின் நண்பர்களான அதானிக்கும் அம்பானிக்கும் மோசடியாக அவரது நிறுவனங்களில் முதலீடு செய்வதாக கூறி, பிற்காலத்தில் அந்தக் கடனை வாராத கடனாக மாற்றி வைப்பதற்காக இந்த மோசடி நடைபெறுகிறது.

பொதுமக்களின் பணத்தை அபகரிக்கும் பிரதமர் மற்றும் மந்திரி சபையின் கூட்டு மோசடியை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் ஏ1(குற்றவாளி) எனவும் நிதி அமைச்சர் ஏ2(குற்றவாளி). இது குறித்து நிதி அமைச்சர் இடம் விளக்கம் கேட்டால் மழுப்பலாகதான் பதில் அளிக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...