மத்திய அரசைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சியின் பொதுமக்கள் முதலீடுகளை அதானிக்கு தாரை வார்த்ததாகக் கூறி மத்திய அரசை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்.பி.ஐ பிரதான அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதற்கு கோவை மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று, மோடி அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், அதானிக்கும் அம்பானிக்கும் எல்ஐசி சொத்துக்களை விற்கக் கூடாது, எஸ்பிஐ மற்றும் எல்ஐசியில் முதலீடு செய்தது நடுத்தர வர்க்கத்தினர், அவர்கள் சேமித்த பணம், அதனை விற்கக் கூடாது, கார்ப்பரேட் முதலாளிகளை வளர்க்கக்கூடாது, என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் கருப்புசாமி, எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சியில் பொதுமக்களின் முதலீடுகளை, மோடியின் நண்பர்களான அதானிக்கும் அம்பானிக்கும் மோசடியாக அவரது நிறுவனங்களில் முதலீடு செய்வதாக கூறி, பிற்காலத்தில் அந்தக் கடனை வாராத கடனாக மாற்றி வைப்பதற்காக இந்த மோசடி நடைபெறுகிறது.

பொதுமக்களின் பணத்தை அபகரிக்கும் பிரதமர் மற்றும் மந்திரி சபையின் கூட்டு மோசடியை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் ஏ1(குற்றவாளி) எனவும் நிதி அமைச்சர் ஏ2(குற்றவாளி). இது குறித்து நிதி அமைச்சர் இடம் விளக்கம் கேட்டால் மழுப்பலாகதான் பதில் அளிக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...