பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் பொம்மலாட்டம் - ஆர்வத்துடன் கண்டுகளித்த திருப்பூர் மாணவிகள்!

திருப்பூரில் உள்ள பழனியம்மாள் அரசுப்பள்ளியில் வளரிளம் பெண்களின் தொடர் கல்வியின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியை ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.



சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம், பொம்மலாட்ட கலைக்குழுவினர் சார்பில், வளரிளம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பாதுகாப்பை எடுத்துரைக்கும் விதமாக பொம்மலாட்ட கலைப்பயணம் திருப்பூரில் இன்று தொடங்கியது. இந்த கலைப் பயணமானது, வரும் 12ஆம் தேதி தேனியில் நிறைவடைய உள்ளது.

இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி போன்ற தொழில் நகரங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் ஆடை உற்பத்தி தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு வளரிளம் பருவத்தினர் சென்று வருகின்றனர்.



இதனால், பள்ளி இடை விலகல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக, திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற பொம்மலாட்ட நிகழ்ச்சியின் மூலம் மாணவிகளுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியை, ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...