கோவை துடியலூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை - ஒருவர் கைது

துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே அரசு மதுபானங்களை பதுக்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திர வடிவேல் தலைமையில் போலீசார் வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள புதர் பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்த அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...