கோவை துடியலூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை - ஒருவர் கைது

துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே அரசு மதுபானங்களை பதுக்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசு மதுபானங்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருச்சந்திர வடிவேல் தலைமையில் போலீசார் வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்குள்ள புதர் பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்த அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 20 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...