ஈரோட்டுக்கு சென்ற ஆதியோகி ரத யாத்திரை - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கோவையில் இருந்து ஈரோட்டுக்கு சென்ற ஆதியோகி ரத யாத்திரையை ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டின் அருகிலேயே‌ கண்டு ரசித்து ஆதியோகியை நேரில் தரிசனம்‌ செய்தனர்.


கோவை:கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ஆதியோகி ரதத்தை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ 'ஆதியோகி ரத யாத்திரை' ஆண்டுதோறும்‌ நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டு 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவ சிலையுடன்‌ கூடிய 5 ரதங்கள்‌ கடந்த மாதம்‌ கோவையிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டின்‌ 4 திசைகளில்‌ பயணத்தைத் தொடங்கின.

அதில்‌ ஒரு ரதம்‌ பொங்கல்‌ தினத்தன்று ஈரோடு மாவட்டத்திற்கு சென்றது. பாரியூர்‌, சூரம்பட்டி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர்‌, ஆப்பகூடல்‌, கூகலூர்‌ என பல்வேறு இடங்களுக்குப் பயணித்து பிப்ரவரி 1ஆம்‌ தேதி கோபிக்கு வருகை தந்தது.



பல்வேறு கிராமங்களில்‌ வீதி வீதியாகச் சென்ற இந்த ரதத்திற்குப் பொதுமக்கள்‌ ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர்‌. குறிப்பாக, வெளியூர்களுக்கு அதிகம்‌ பயணம்‌ செய்யாத கிராமப்புற மக்கள்‌, முதியவர்கள்‌ என பல தரப்பட்ட மக்கள்‌ தங்கள்‌ விட்டை தேடி ஆதியோகி வந்ததைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்‌.

கோபியிலிருந்து கொடிவேரி, அரசர்‌, பெருந்துறை, பங்களா புதூர்‌ போன்ற இடங்களுக்கு செல்லும்‌ இந்த ரதம்‌ பிப்ரவரி 10ஆம்‌ தேதி வரை ஈரோட்டு மாவட்டத்தில் இருக்கும்‌. பின்னர்‌, அங்கிருந்து கோவைக்குப் பயணிக்கும்‌.

இந்த யாத்திரையில்‌ பிப்ரவரி 18ஆம்‌ தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும்‌, கோபியில்‌ உள்ள லிங்க பைரவியிலும்‌ நடைபெறும்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...