கடலுக்குள் பேனா சின்னம் அமைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் - கிருஷ்ணசாமி கருத்து

தமிழக அரசின் சார்பில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியை முற்றிலுமாக கைவிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


சென்னை: மக்களின் வரிப்பணத்தில் நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கு அரசு முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் பெரும்பாலும் இலவசங்கள் தான் அதிகமாகப் பிரதிபலிக்கும்.

ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில், அதற்கு மாறாக வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கான அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் 50 புதிய விமான நிலையங்கள் உருவாக்குதல், ரயில்வே துறையை மேம்படுத்துதல் என்று பல்வேறு சிறப்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களுள் ஒருவராக இருக்கக்கூடிய அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வார காலத்தில் மிகப்பெரிய சரிவைக் கண்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை காரணமாக இந்த சரிவை அந்த குழுமம் சந்தித்திருக்கிறது. இது சர்வதேச அளவில் ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் சரிவு என்பதை விட, இந்தியாவின் நன்மதிப்பைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட துறைகள் இதுபோன்ற பெரும் குழுமங்களின் பணப்பரிமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க வழிவகை செய்ய வேண்டும்.

பேனா நினைவுச் சின்னம் மக்களுக்குப் பயன் தரக்கூடியது அல்ல, எனவே தமிழக அரசின் சார்பில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியை முற்றிலுமாக கைவிட வேண்டும், அதுமட்டுமில்லாமல் தமிழகத்தின்வேறு எந்த பகுதியிலும் மக்களின் வரிப்பணத்தில் நினைவுச் சின்னங்கள் அமைப்பதற்கு மாநில அரசு முயற்சிகளை மேற்கொள்ள கூடாது. அது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...