சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை காப்புக்காடு பகுதியில் மானை வேட்டையாடிய இருவரை கைது செய்த வனத்துறையினர், மான் இறைச்சி மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: பெத்திக்குட்டை காப்புக் காடு பகுதியில் புள்ளி மானை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை காப்புக் காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே இருவர் ஆண் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி கொண்டு செல்வதை அறிந்து, உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களை வனத்துறை அலுவலகத்திற்கு, அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், இருவரும் அம்மன் புதூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கூத்தாண்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் சுருக்கு கம்பி மூலம் மானை வேட்டையாடி இறைச்சியைக் கடத்தி செல்வதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து இறந்த ஆண் புள்ளி மானின் இறைச்சி, ஆயுதங்கள், பைக் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.
சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை காப்புக் காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே இருவர் ஆண் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி கொண்டு செல்வதை அறிந்து, உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை வனத்துறை அலுவலகத்திற்கு, அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், இருவரும் அம்மன் புதூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் கூத்தாண்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் சுருக்கு கம்பி மூலம் மானை வேட்டையாடி இறைச்சியைக் கடத்தி செல்வதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து இறந்த ஆண் புள்ளி மானின் இறைச்சி, ஆயுதங்கள், பைக் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.