கோவை மாவட்டத்தின் 183வது ஆட்சித்தலைவராக கிராந்திகுமார் பாடி இன்று பொறுப்பேற்பு

கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்ட கிராந்தி குமார் பாடி, அரசின் திட்டங்கள், அரசின் உதவிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்ட கிராந்திகுமார் பாடி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.எஸ்.சமீரன் சென்னைக்கு மாற்றப்பட்டார். இதனைதொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியராக கிராந்திகுமார் பாடி நியமிக்கப்பட்டார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து சமீரன், கிராந்திகுமார் பாடியிடம் கோப்புகளை ஒப்படைத்தார். அந்த கோப்புகளில் கையெழுத்திட்டு கிராந்திகுமார் பாடி கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்தில் அரசு திட்டங்கள், அரசு உதவிகள் அனைத்தையும் மக்களிடம் உடனடியாக கொண்டு சேர்க்கவும், மக்களின் குறைகளை தீர்க்கவும், மாவட்டத்தின் உட்கட்டமைப்புகள், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுப்பேன்.

அனைத்து துறைகளில் இருக்கின்ற முதன்மை திட்டங்கள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். களத்திற்கு சென்று அனைத்து அரசு திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

2015ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற கிராந்திகுமார் பாடி, இதற்கு முன்னதாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளராக இருந்துள்ளார். அதற்கும் முன்பு நாமக்கல் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் கமர்சியல் டாக்ஸ் மற்றும் ஜி.எஸ்.டி யில் இணை ஆணையாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக பொறுப்பேற்ற கிராந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்தின் 183வது ஆட்சித்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...