கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் முகாம் - பொதுமக்கள் அச்சம்!

கோத்தகிரி அடுத்த கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், யானைகளை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர், கோழிக்கரை ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளன.

இதில் கோழிக்கரை பழங்குடியின கிராமத்தின் சாலையை மேல்கூப்பு, கீழ்கூப்பு, செம்மநாரை, வாகப்பனை, அட்டடி, கோழித்தொரை உள்ளிட்ட கிராம மக்கள் பிரதான சாலையாக தங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் சாலையோர காப்பி, தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.



இதன் காரணமாக வனத்துறையினர் அப்பகுதியில் காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு, குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...