கோவையில் மதநல்லிணக்கம் - பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்கள்!

கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகள் வழங்கிய இஸ்லாமியர்களின் மத நல்லிணக்கத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.



கோவை: கோவையிலிருந்து உக்கடம் வழியாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்குப் பசியில்லா கோவை அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பக்தர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பழனிக்குப் பாதயாத்திரை ஆக பக்தர்கள் செல்கின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோவையிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் செல்கின்றனர்.



இந்த நிலையில் கோவையிலிருந்து உக்கடம் வழியாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்குப் பசியில்லா கோவை அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பக்தர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதில் கோவை அறக்கட்டளை தலைவர் சையது இப்ராஹிம், செயலாளர் மன்சூர், பொருளாளர் நிஜாம்தீன், கௌரவ ஆலோசகர் கந்தசாமி மற்றும் பசியில்லா கோவை அறக்கட்டளை சேர்ந்த இஸ்மாயில், பாரூக், பஷீர், தளபதி மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...