கோவையில் மதநல்லிணக்கம் - பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்கள்!

கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகள் வழங்கிய இஸ்லாமியர்களின் மத நல்லிணக்கத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.



கோவை: கோவையிலிருந்து உக்கடம் வழியாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்குப் பசியில்லா கோவை அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பக்தர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பழனிக்குப் பாதயாத்திரை ஆக பக்தர்கள் செல்கின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோவையிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் செல்கின்றனர்.



இந்த நிலையில் கோவையிலிருந்து உக்கடம் வழியாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்குப் பசியில்லா கோவை அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பக்தர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதில் கோவை அறக்கட்டளை தலைவர் சையது இப்ராஹிம், செயலாளர் மன்சூர், பொருளாளர் நிஜாம்தீன், கௌரவ ஆலோசகர் கந்தசாமி மற்றும் பசியில்லா கோவை அறக்கட்டளை சேர்ந்த இஸ்மாயில், பாரூக், பஷீர், தளபதி மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...