கோவையில் மதநல்லிணக்கம் - பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்கள்!

கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகள் வழங்கிய இஸ்லாமியர்களின் மத நல்லிணக்கத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.



கோவை: கோவையிலிருந்து உக்கடம் வழியாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்குப் பசியில்லா கோவை அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பக்தர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பழனிக்குப் பாதயாத்திரை ஆக பக்தர்கள் செல்கின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோவையிலிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் செல்கின்றனர்.



இந்த நிலையில் கோவையிலிருந்து உக்கடம் வழியாகச் சென்று கொண்டிருந்த பக்தர்களுக்குப் பசியில்லா கோவை அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பக்தர்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதில் கோவை அறக்கட்டளை தலைவர் சையது இப்ராஹிம், செயலாளர் மன்சூர், பொருளாளர் நிஜாம்தீன், கௌரவ ஆலோசகர் கந்தசாமி மற்றும் பசியில்லா கோவை அறக்கட்டளை சேர்ந்த இஸ்மாயில், பாரூக், பஷீர், தளபதி மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...