பழனிக்கு பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தார் எம்எல்ஏ வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. வுமான வானதி சீனிவாசன் பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடான பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இதனிடையே, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வுமான வானதி சீனிவாசன் கடந்த 30 ஆம் தேதி பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்டார்.

ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து பாத யாத்திரை புறப்பட்ட அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழியனுப்பி வைத்தார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொள்ளாச்சி, உடுமலை வழியாக நடந்து வந்த வானதி சீனிவாசன் இன்று பழனி வந்தடைந்தார்.



பழனி சண்முக நதியில் புனித தீர்த்தம் தெளித்துக் கொண்டு, தைப்பூசத் திருவிழா நடைபெறும் பழனி பெரியநாயகி அம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.



இதைத்தொடர்ந்து பழனி மலை கோயிலுக்கு சென்ற வானதி சீனிவாசன் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். பாதயாத்திரை ஆக பழனி வந்த வானதி சீனிவாசனுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதயாத்திரையை நிறைவு செய்த வானதி சீனிவாசன் சுவாமி தரிசனம் செய்த பிறகு மீண்டும் கோவைக்கு திரும்பினார்.

முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும், கோவை தெற்கு தொகுதியில் தான் பெற்ற வெற்றிக்காக பழனி முருகனுக்கு வைத்த வேண்டுதலை நிறைவேற்றவும் இந்த பாதயாத்திரையை மேற்கொள்வதாக வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...