கோவையில் ரயில் மோதி கல்லூரி மாணவர், பள்ளி மாணவி தற்கொலை? - போலீசார் விசாரணை

சூலூர் அடுத்த ராசிபாளையம் அருகே தண்டவாளத்தில் ரயில் மோதி கல்லூரி மாணவர், பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், தற்கொலையா என போத்தனூர் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவன் மற்றும் பள்ளி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர் அடுத்த அன்னமடை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜய்(19) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அவரது நண்பர் ராஜ்குமார் என்பவர் உடன் ராசிபாளையம் வரை செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனையடுத்து ராஜ்குமாரின் இருசக்கர வாகனத்தில் இருவரும் ராசிபாளையம் நோக்கி சென்றுள்ளனர்.

ராசிபாளையம் ரயில்வே கேட் அருகே வந்தபோது, வண்டியை நிறுத்த சொல்லி கீழே இறங்கிய அஜய், ஒருவரை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு, அங்கிருந்த தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளார்.

இரண்டு மூன்று ரயில்கள் கடந்து சென்ற பின்னரும் அஜய் வராததால், சந்தேகமடைந்த நண்பர் ராஜ்குமார் தண்டவாளம் அருகே சென்ற போது, அஜய்-யும் மற்றும் பெண்ணும் ரயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமாரின் கூச்சல் சத்தம் கேட்டு, அங்கிலிருந்தவர்கள் சென்று பார்த்த போது இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். தொடர்ந்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றினர்.

விசாரணையில் இறந்த பெண், ராசி பாளையம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரது உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று மாலை தனது தோழியுடன் படிப்பதற்காக சென்ற பள்ளி மாணவி, தண்டவாளத்தில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது, தண்டவாளத்தில் அமர்ந்து பேசும் போது ரயிலில் மோதி உயிரிழந்தனரா என போத்தனூர் போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயிலில் அடிப்பட்டு கல்லூரி மாணவரும், பள்ளி மாணவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...