உடுமலையில் கத்தரிக்காய் சாகுபடியில் நோய் தாக்குதல் - இழப்பீடு கோரும் விவசாயிகள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கத்தரிக்காயில் அதிகரித்துவரும் நோய்த்தாக்குதலால் விவசாயிகள் கவலை. அரசு உரிய இழப்பீடு வழங்கும்படி கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளான உரல்பட்டி ,பாப்பான்குளம் குடிமங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களில் கிணற்றுப் பாசனத்தில் பரவலாக கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது.

நாட்டு ரக கத்தரி சாகுபடி பரப்பு குறைந்து, பெரும்பாலும் வீரிய ரக விதைகளே அண்மைக்காலமாக பயன்படுத்தப்படுகிறது. சிலர், நாற்றுப்பண்ணைகளிலிருந்து நாற்றுகள் வாங்கி, நடவு செய்யும் முறையை பின்பற்றுகின்றனர். இங்கு உற்பத்தியாகும் கத்தரிக்காயானது பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.



நுண்ணீர் மற்றும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துள்ளதால், ஆண்டு முழுவதும் இவ்வகை சாகுபடியில் உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சீசனில் அதிக பனிப்பொழிவு காரணமாக கத்தரி செடிகளில் நோய்த்தாக்குதல் அதிகரித்துள்ளது.



குறிப்பாக, கத்தரிக்காயில் அழுகல் நோய் மற்றும் துளைகள் விழுவது அதிகரித்துள்ளது. எனவே, சந்தைகளில் விற்பனை செய்ய முடியாமல் காய்களை குப்பைகளில் வீசும்நிலை ஏற்பட்டுள்ளது.

வேளாண்துறையினரின் பரிந்துரைப்படி, மருந்து தெளித்தும் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. சாகுபடியில் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.



உற்பத்தி பாதித்து, சந்தைக்கு வரத்து குறைந்தால், விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்சமயம் உடுமலை சந்தைகளில் கத்திரிக்காய் கிலோ 18 ரூபாய்க்கு விற்பனை ஆகிவருகிறது.

ஒரு ஏக்கருக்கு சுமார் 30,000 வரை செலவு செய்திருக்கும் நிலையில் கத்தரிக்காயில் நோய் தாக்குதலால் மகசூல் குறைய வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், சம்பந்தப்பட்ட வேளாண்துறையினர் களஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...