உடுமலையில் கத்தரிக்காய் சாகுபடியில் நோய் தாக்குதல் - இழப்பீடு கோரும் விவசாயிகள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கத்தரிக்காயில் அதிகரித்துவரும் நோய்த்தாக்குதலால் விவசாயிகள் கவலை. அரசு உரிய இழப்பீடு வழங்கும்படி கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டார பகுதிகளான உரல்பட்டி ,பாப்பான்குளம் குடிமங்கலம் உட்பட பல்வேறு கிராமங்களில் கிணற்றுப் பாசனத்தில் பரவலாக கத்தரி சாகுபடி செய்யப்படுகிறது.

நாட்டு ரக கத்தரி சாகுபடி பரப்பு குறைந்து, பெரும்பாலும் வீரிய ரக விதைகளே அண்மைக்காலமாக பயன்படுத்தப்படுகிறது. சிலர், நாற்றுப்பண்ணைகளிலிருந்து நாற்றுகள் வாங்கி, நடவு செய்யும் முறையை பின்பற்றுகின்றனர். இங்கு உற்பத்தியாகும் கத்தரிக்காயானது பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.



நுண்ணீர் மற்றும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துள்ளதால், ஆண்டு முழுவதும் இவ்வகை சாகுபடியில் உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சீசனில் அதிக பனிப்பொழிவு காரணமாக கத்தரி செடிகளில் நோய்த்தாக்குதல் அதிகரித்துள்ளது.



குறிப்பாக, கத்தரிக்காயில் அழுகல் நோய் மற்றும் துளைகள் விழுவது அதிகரித்துள்ளது. எனவே, சந்தைகளில் விற்பனை செய்ய முடியாமல் காய்களை குப்பைகளில் வீசும்நிலை ஏற்பட்டுள்ளது.

வேளாண்துறையினரின் பரிந்துரைப்படி, மருந்து தெளித்தும் நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை. சாகுபடியில் நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.



உற்பத்தி பாதித்து, சந்தைக்கு வரத்து குறைந்தால், விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தற்சமயம் உடுமலை சந்தைகளில் கத்திரிக்காய் கிலோ 18 ரூபாய்க்கு விற்பனை ஆகிவருகிறது.

ஒரு ஏக்கருக்கு சுமார் 30,000 வரை செலவு செய்திருக்கும் நிலையில் கத்தரிக்காயில் நோய் தாக்குதலால் மகசூல் குறைய வாய்ப்புள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், சம்பந்தப்பட்ட வேளாண்துறையினர் களஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...