அண்ணாவின் நினைவு நாளில் எடப்பாடி ஆட்சி அமைய சபதம் எடுத்த அதிமுகவினர்!

கோவையில் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு சபதம் ஏற்றனர்.



கோவை: பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி கோவையில் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைய சபதம் ஏற்றனர்.

பேரறிஞர் அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்புகள் பொதுமக்கள் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும் புகைப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் அவிநாசி சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இதய தெய்வம் மாளிகையில் அண்ணாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 40 இடங்களை பிடிக்கும் என்றும், வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியே அமையும் என அண்ணா நினைவு நாளில் சத்தியவாக்கு” என சபதம் எடுத்தனர்.



இந்நிகழ்வில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்சுணன், கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஜே.ஆர்.ஜெயராம் உட்பட அதிமுகவினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...