உடுமலை மின்பகிர்மான திட்டமேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் இல்லை என்று அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டுவரும் மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவிவந்தன. இது உடுமலை பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும், இந்த இடமாற்ற முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, அமமுக மற்றும் பல்வேறு பொது அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.



இந்நிலையில், இந்த அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்ற முடிவு எதுவும் செய்யப்படவில்லை என உடுமலை மின்வாரிய அலுவலகம் மேற்பார்வை பொறியாளர் எஸ்.விஸ்வநாதன் எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படாது என்ற இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...