உடுமலை மின்பகிர்மான திட்டமேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் இல்லை என்று அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டுவரும் மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் பரவிவந்தன. இது உடுமலை பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும், இந்த இடமாற்ற முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, அமமுக மற்றும் பல்வேறு பொது அமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.



இந்நிலையில், இந்த அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்ற முடிவு எதுவும் செய்யப்படவில்லை என உடுமலை மின்வாரிய அலுவலகம் மேற்பார்வை பொறியாளர் எஸ்.விஸ்வநாதன் எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மின் பகிர்மான திட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படாது என்ற இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...