அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான ஊழல் புகார் - 70 பக்க ஆவணங்கள் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது அளித்த ஊழல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் மீண்டும் 70 பக்க ஆவணங்களை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.


கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பேருந்து நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்வதில் ஊழல் செய்ததாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோதும், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு திட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் செய்திருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதில், உடுமலை ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது எத்தனை திட்டங்கள் கையெழுத்தானது, முடிக்கப்பட்டதாக கூறிய பணிகள் நிறைவடையாமல் உள்ள புகைப்படங்களுடன் ஆவணங்களை அளித்துள்ளதாக கூறிய ரேஸ்கோர்ஸ் ரகுநாத், முன்னாள் அமைச்சர் மீதான தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...