அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எதிரான ஊழல் புகார் - 70 பக்க ஆவணங்கள் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது அளித்த ஊழல் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் மீண்டும் 70 பக்க ஆவணங்களை கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.


கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பேருந்து நிழற்குடை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்வதில் ஊழல் செய்ததாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்தபோதும், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு திட்டங்களில் பல கோடி ரூபாய்க்கு ஊழல் செய்திருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரேஸ்கோர்ஸ் ரகுநாத் மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதில், உடுமலை ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது எத்தனை திட்டங்கள் கையெழுத்தானது, முடிக்கப்பட்டதாக கூறிய பணிகள் நிறைவடையாமல் உள்ள புகைப்படங்களுடன் ஆவணங்களை அளித்துள்ளதாக கூறிய ரேஸ்கோர்ஸ் ரகுநாத், முன்னாள் அமைச்சர் மீதான தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...