பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தக் கோரிக்கை

உடுமலை அருகேயுள்ள பெரியவாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: பெரியவாளவாடியைச் சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வரும் பெரிய வாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பெரியவாளவாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

ஆனால் பிரசவம், விபத்து போன்ற தருணங்களில் அவசர கால சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, பெரியவாளவாடியைச் சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்குச் சிகிச்சைக்காக வருகின்றனர். சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களுக்குச் சிகிச்சையும், முதலுதவியும் அளிக்கப்படுகிறது. பிரசவமும் நடைபெற்று வருகிறது.

ஆனால் பிரசவத்தின் போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் இங்கிருந்து உடுமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய உள்ளது. எனவே பெரியவாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும்.

அத்துடன் மருத்துவமனைக்கு அருகே உள்ள காலி இடத்தில் அறுவைசிகிச்சை அரங்குடன் கூடிய கட்டிடத்தைக் கட்டுவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...