திருப்பூரில் லேபிள் பேக்கிங் நிறுவனத்தில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை!

திருப்பூர் வேலம்பாளையம் அருகே செயல்பட்டு வந்த லேபிள் பேக்கிங் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் அருகே லேபிள் பேக்கிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.

வேலம்பாளையம் அடுத்த ஏ.பி.நகரில் முத்து என்பவருக்கு சொந்தமான லேபிள் பேக்கிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 5க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், திடீரென அங்குள்ள இயந்திரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே தீ மளமளவென அருகில் இருந்த வீட்டிற்கும் பரவியுள்ளது.



தீ பரவியதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேறி, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், விரைந்து வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் லேபிள் பேக்கிங் நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் எரிந்து சேதமானது.

இந்நிலையில் இந்த விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்த அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...