கோவை துடியலூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் கைது - போலீசார் அதிரடி..!

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த அப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள் மற்றும் பொருட்கள் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையில் உதவி ஆய்வாளர் அரவிந்தராஜன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார், தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இதில் அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முன்னாள் குற்றவாளியான கார்த்திகேயன் என்பவரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பழைய குற்றவாளியான கார்த்திகேயன் மீது ஏற்கனவே துடியலூர், வடவள்ளி, போத்தனூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....