கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 66 பார்ம். டி மற்றும் 17 எம்.பார்ம் மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் டாக்டர் V. கலைசெல்வன் பட்டங்களை வழங்கினார்.


Coimbatore: கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் முனைவர் R. வசந்தகுமார் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் S. ராம் காந்த் தலைமை தாங்கினார்.



பட்டமளிப்பு விழாவில் இந்திய மருந்தியல் ஆணையத்தின் (IPC) செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குனர் டாக்டர் V. கலைசெல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 242 பி.பார்ம், 66 பார்ம். டி மற்றும் 17 எம்.பார்ம் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். பல்கலைக்கழக மற்றும் GPAT தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும், மெடல்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.



சிறப்பு விருந்தினர் பேசுகையில் மருந்துகளின் தரம், பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதில் மருந்தாளுனர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று வலியுறுத்தினார். மருந்தாளுனர்களின் தொழில்முறை பொறுப்பு குறித்தும் அவர் மாணவர்களுக்கு வழிகாட்டினார்.



இந்த விழாவில் கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் முருகையா, கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் மோகன், பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவிற்கு சிறப்பு சேர்த்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...