கோவை சூலூரில் பெட்டிக்கடையில் அரசு மதுபானம் விற்பனை - லாரி ஓட்டுநர் எடுத்த வீடியோ வைரல்..!

கோவை மாவட்டம் சூலூரில் பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக அரசு மதுபானத்தை விற்பனை செய்துவந்த கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசு மதுபானங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளபாளையம், பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக வீடுகள் மற்றும் பெட்டி கடைகளில் மது விற்பனை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் வாட்ஸ் அப் வீடியோக்கள் பரவிவந்தது.



அதிலும் குறிப்பாக லாரி ஓட்டுநர் ஒருவர், பெட்டி கடையில் மதுபானம் விற்பதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இது வலைதளங்களில் வைரலான நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, பாப்பம்பட்டி பகுதியில் பெட்டிக்கடையில் மது விற்பனை செய்து வந்த சுவாமிநாதன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பெட்டிக்கடைக்குள் வைத்து அந்த வழியாக செல்லக்கூடிய வட மாநில நபர்கள் மற்றும் லாரி ஓட்டுனர்களுக்கு மதுபானத்தை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 பாட்டில் மதுபானங்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...