தாராபுரம் கொளத்துப்பாளையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி - தொடங்கி வைத்த அமைச்சர் கயல்விழிசெல்வராஜ்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் கிராமம் முழுவதும் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக 52 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நகர்ப்புற பகுதிகளில் வளர்ச்சிக்காக நமக்கு நாமே திட்டம் அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்திற்கு குறிப்பிட்ட அளவு நிதி பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.



அந்த வகையில் இன்று கொளத்துப்பாளையம் கிராமம் முழுவதும் புதிய 52 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.



இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கூறியதாவது:

கடந்த ஆறு மாதத்தில் கொளத்துப்பாளையம் கிராமத்தில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் தொழில் அதிபரின் வீட்டில் நகை மற்றும் ரொக்க பணத்தை வட மாநில தொழிலாளர்கள் திருடிச்சென்றனர். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பேரூராட்சி துணைத் தலைவர் கே.கே. மீசை துரைசாமி வீட்டில் ஏழு பவுன் நகை மற்றும் ரொக்க பணம் திருடுபோனது.

கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் வடமாநிலத்தவர்கள் அடிக்கடி வாகனங்களில் வந்து செல்வதாலும், விலை உயர்ந்த நாய், கோழி ஆடு மற்றும் தானிய பொருட்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனை தடுக்கும் விதத்திலும், குற்றச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டு அறிந்து நடவடிக்கை எடுக்க, எங்கள் கிராமப் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலமாக ஊர் பொதுமக்கள் சார்பில் 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், அரசு பொது நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் பணமும் பெற்று தற்போது 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கரூர் மெயின் ரோட்டில் இருந்து பள்ளிவாசல் தெரு, ஆலமரவீதி, நடுவீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலாளர், பேரூராட்சி தலைவர், திமுகவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...