கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ரயில் நிலையம் சாலையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கட்டிடத் தொழிலாளி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதி சேர்ந்தவர் கந்தசாமி.
கட்டிட கூலித்தொழிலாளியான இவர், நேற்று புதன்கிழமை மாலை ரயில் நிலையம் சாலையில் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கரம் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த கந்தசாமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
சம்பவம் தொடர்பாக இருசக்கர வாகன ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கந்தசாமி புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டிட கூலித்தொழிலாளியான இவர், நேற்று புதன்கிழமை மாலை ரயில் நிலையம் சாலையில் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கரம் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த கந்தசாமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
சம்பவம் தொடர்பாக இருசக்கர வாகன ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கந்தசாமி புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.