கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனம் மோதி விபத்து - கட்டிடத் தொழிலாளி படுகாயம்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ரயில் நிலையம் சாலையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கட்டிடத் தொழிலாளி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் பகுதி சேர்ந்தவர் கந்தசாமி.

கட்டிட கூலித்தொழிலாளியான இவர், நேற்று புதன்கிழமை மாலை ரயில் நிலையம் சாலையில் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கரம் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த கந்தசாமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

சம்பவம் தொடர்பாக இருசக்கர வாகன ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கந்தசாமி புகார் அளித்தார்.

அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...