தாராபுரத்தில் டெம்போ டிராவலர் மீது பள்ளி வாகனம் மோதி விபத்து - பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பள்ளி வாகனம், டெம்போ டிராவலர் மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு. பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்காரணம் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அலங்கியம் சாலையில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றிச் சென்ற தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வாகனம் இண்டிகேட்டர் போடாமல் திடீரென சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியது. இதனால், அந்த வழியாக வந்து கொண்டிருந்த தனியார் டெம்போ ட்ராவலர் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், தனியார் ட்ராவலர் வாகனத்தின் கண்ணாடி உடைந்து சேதமானது. இரு ஓட்டுனர்கள் இடையே சாலையின் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். இரண்டு வாகனங்களும் நடுரோட்டில் நின்றதால் கரூரிலிருந்து பேருந்து நிலையம் செல்லவிருந்த அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தினர்.



இதனால், சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டினர். காலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...