திருப்பூர் அருகே உள்ளூர்வாசியிடம் வடமாநில தொழிலாளர்கள் வாக்குவாதம் - வீடியோ வைரல்

பரமசிவம் பாளையத்தில் இருசக்கர வாகன சாவியைத் தரச் சொல்லி வடமாநில தொழிலாளர்கள் உள்ளூர்வாசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.



திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே உள்ளூர்வாசியிடம், வடமாநில தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்துள்ள பொங்கு பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளைத்தில் 3000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் தனது மகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகத் தனது இரு சக்கர வாகனத்தில் பரமசிவம் பாளையம் வழியாக வந்த போது எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளர் மீது மோதியதாகத் தெரிகிறது.



இதனைத் தொடர்ந்து அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு சம்பத்தைச் சிறை பிடித்து அவரிடமிருந்த பணத்தையும், பெற்றுக் கொண்டு இருசக்கர வாகன சாவியைத் தராமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சம்பத் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவ்வழியாக வந்த இன்னொருவரின் வாகனத்தில் சென்று தனது மகளை அழைத்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மோதிக் கொண்டதாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...