தொப்பம்பட்டி அருகே 12-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவர் வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.
கோவை: கோவை தொப்பம்பட்டி பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது 18 வயது மகன் கனிஷ்கன், காரமடையில் உள்ள தனியார் பள்ளியில் 12 -ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார், கனிஷ்கனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
12-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.